பாதசாரிக்கடவையில் நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்கள்- பொலிஸார் அதிரடி!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள பாதசாரிக் கடவையில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களை, வாகனம் ஒன்றில் யாழ்ப்பாண போக்குவரத்துப் பொலிஸார் இன்று ஏற்றிச் சென்றனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக பாதசாரிக் கடவைகள் காணப்படுகின்றன. அவ்வாறு உள்ள கடவைகளை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத வகையில் தரித்து விடப்பட்டிருந்த மூன்று மோட்டார் சைக்கிள்களை வாகனம் ஒன்றின் ஊடாக பொலிஸார் ஏற்றினர் எனத் தெரிவிக்கப்படுகிறது.