மலசலகூடத்தை கழுவிய -பிரதேச சபை உறுப்பினர்!!

பொது மலசலகூடத்தைத் தன் கையாலேயே துப்புரவு செய்தார் ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை உறுப்பினர்.

பிரதேச சபையிடம் மாதக் கணக்கில் வேண்டுகோள் விடுத்தும் விடயம் கரிசனைக்கு எடுத்துக் கொள்ளப்படாததால் தானே முன் வந்து பிரதேச சபையின் பொறுப்பிலுள்ள பொது மலசல கூடத்தைத் துப்புரவு செய்ததாக ஏறாவூர்ப் பற்று பிரதேச சபையின் உறுப்பினர் நல்லையா சரஸ்வதி தெரிவித்தார்.

பிரதேச சபையின் மாதாந்தப் பொதுக் கூட்டம் நாளை நடைபெறுவதற்கு முன்பதாக அவர் இந்தப் பொதுப் பணியைத் தன் கையாலேயே செய்து முடித்துள்ளார்.