அதிநவீன முச்சக்கர வண்டி! நல்லாட்சியில் ஏற்படவுள்ள புரட்சி!

இலங்கையில் விரைவில் இலத்திரனியல் முச்சக்கர வண்டி ஒன்று அறிமுகமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜப்பான் மற்றும் இலங்கை இணைந்து இலத்திரனியல் முச்சக்கர வண்டி ஒன்றை தயாரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
நிதி அமைச்சர் மங்கள சமரவீர தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன் முதல் தொகுதி 2020 மத்திய காலப்பகுதியில் வெளியிடப்படவுள்ளது.
இந்த முச்சக்கவண்டிக்கு சமுராய் என பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.