என்மீது பொய்க் குற்றச் சாட்டு போடுகிறார் அஸ்மின் – அனந்தி தெரிவிப்பு

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மின் தன்மீது பொய்க் குற்றச் சாட்டு சுமத்துவதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மகாணசபை அமர்வு தற்போது ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.

அனந்தி சசிதரனிடம் துப்பாக்கி இருப்பதாக அயூப் அஸ்மின் கூறியிருந்தார்.

இது தொடர்பில், இன்று அனந்தி சசிதரனால் தன்னிலை விளக்கம் கொடுக்கப்பட்டது. இதன்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதனிடையே குழப்ப நிலையும் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.