யாழ். இளைஞனுக்கு கொழும்பில் நேர்ந்த பரிதாபம்!

தெஹிவளை நகரில் அரச வங்கி ஒன்றில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஏமாற்றப்பட்டுள்ளார்.

அவரிடம் இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர் கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

சந்தேக நபரை கைதுசெய்ய, சீ.சீ.டி.வி காட்சிகள் உதவியுடன் விசாரணைகளை நடத்தி வருவதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொழில் புரியும் இடத்தில் பணிபுரியும் நபர்களிடம் சீட்டு கட்டி சேர்த்த 2 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் பணத்தை வங்கிக் கணக்கில் வைப்புச் செய்ய குறித்த யாழ். இளைஞர் வங்கிக்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த நபர் ஒருவர், பணத்தை வைப்புச் செய்ய வரிசையில் நிற்க வேண்டியதில்லை, படிவத்தை நிரப்ப வேண்டியதில்லை என தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, இயந்திரத்தில் வைப்புச் செய்ய உதவி செய்வதாக கூறி, வங்கிக்கு முன்னால் பொருத்தப்பட்டிருக்கும் பணம் வைப்புச் செய்யும் இயந்திரம் இருக்கும் இடத்திற்கு தந்திரமாக அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு சந்தேக நபர் பணத்தை எடுத்து கொண்டு தப்பியோடியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.