இலங்கையின் பல பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 3325 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு 9 மணி முதல் இன்று காலை 8 மணிவரை இந்த கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பல பகுதிகளிலும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 3325 பேரே குறித்த சுற்றிவளைப்பின்போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரைக்கு அமைய முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சுற்றிவளைப்பின்போது, வாகன போக்குவரத்து விதி மீறல் தொடர்பாக 5808 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.