யாழ்ப்பாணத்தை சுற்றிவளைத்து அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளும் பொலிஸார்!

யாழ்ப்பாண பகுதிகளிலுள்ள பொலிஸ் நிலையங்களில் பணியாற்றும் அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் ஆவா உள்ளிட்ட சமூக விரோத நடவடிக்கைகள் அதிகம் காணப்படுவதனால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வட மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சுன்னாகம், மானிப்பாய் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள காவல் நிலையத்தில் கடமையாற்றுபவர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு, ஆவா குழுவினரின் செயற்பாடுகள் அதிகம் காணப்படுகின்ற பகுதிகளிலும் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.அத்துடன் ஆவா குழுவினரின் செயற்பாடுகள் அதிகம் காணப்படுகின்ற பகுதிகளில் புலனாய்வு துறையினரும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.