மசாஜ் நிலையம் சென்ற ஜேர்மன் யுவதிக்கு ஏற்பட்ட பரிதாபம்!

காலி, இந்துருவ யாலேகம பிரதேசத்தில் இயங்கி வரும் மசாஜ் நிலையம் ஒன்றில் 21 வயதான ஜேர்மனிய யுவதி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக நிலையத்தின் முகாமையாளர் உட்பட இரண்டு பேரை கொஸ்கொடை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

ஜேர்மனிய யுவதி, உடலை மசாஜ் செய்துக்கொள்வதற்காக குறித்த மசாஜ் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

மசாஜ் செய்யும் போது, நிலையத்தின் முகாமையாளரும், மசாஜ் செய்த நபரும் தன்னை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக ஜேர்மனிய யுவதி கொழும்பு சுற்றுலா பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இதற்கு அமைய செயற்பட்ட சுற்றுலா பொலிஸ் அதிகாரிகள் குழு, கொஸ்கொடை பகுதிக்கு சென்று சந்தேக நபர்களை கைதுசெய்து மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர்களை கொஸ்கொடை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதேவேளை, சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.