வீடு திரும்பிய இளம் மனைவிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! வவுனியாவில் சம்பவம்

வவுனியாவில் இன்று (03.08) காலை தூக்கில் தொங்கிய நிலையில் வீட்டிற்குள் சடலம் ஒன்று இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற பொலிசார் சடலத்தினை மீட்டெடுத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா சிதம்பரபுரம், கற்குளம், 2ம் படிவம் பகுதியில் வசித்த வந்த பேருந்து சாரதியான சந்திரகுமார் றஜீவன் என்ற 33 வயது குடும்பஸ்தர் இன்று காலை 5 மணியளவில் வீட்டிற்குள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

தாதியாக பணிபுரியும் இவரது மனைவி நேற்று இரவு வேலைக்கு சென்றுவிட்டு இன்று காலை வீட்டிற்கு சென்ற போது கணவன் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். இதையடுத்து பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்குச் சென்ற சிதம்பரபுரம் பொலிசார் சடலத்தினை பார்வையிட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.