யாழில் சற்று முன்னர் பலர் அதிரடியாக கைது!

யாழில் எட்டுப் பேர் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வாள்கள் மற்றும் துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் மானிப்பாய் பொலிஸார் சாவகச்சேரியில் வைத்து குறித்த 8 பேரை கைது செய்துள்ளனர்.

சிவில் உடையில் வந்த மானிப்பாய் பொலிஸார் இவர்களைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மானிப்பாயிலிருந்து வந்த பொலிஸ் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.