யாழில் நடந்து சென்ற மூதாட்டி அணிந்திருந்த இரண்டரைப் பவுண் சங்கிலி திருடர்களால் பறித்துச் செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் நேற்று முன்தினம் வல்வெட்டித்துறையில் இடம்பெற்றது.
மூதாட்டியிடம் கதை கேட்டே சங்கிலி அறுக்கப்பட்டது என்று பாதிக்கப்பட்ட மூதாட்டி வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார்.
எனினும் 5 மணித்தியாலங்களில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
துரித விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் கம்பர்மலைப் பகுதியில் சந்தேகத்தில் ஒருவரைக் கைது செய்தனர்.
அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. நேற்று சந்தேகநபர் பருத்தித்துறை நீதிவான் மன்றில் முற்படுத்தப்பட்டார்.
எதிர்வரும் 10ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.