அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பள உயர்வை தான் ஒரு போதும் அனுமதி போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் இன்று மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சம்பளம் உயர்த்தப்படவுள்ளதாக அண்மையில் கருத்துக்கள் வெளியாகியிருந்தன.
இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.