குளவிக் கொட்டுக்கு இலக்கான -மாணவர்களும் பரீட்சைக்கு!!

குளவிக் கொட்டுக்கிலக்காகி பதவிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் சிலரும் இன்றும் நடைபெறும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்குச் சென்றுள்ளனர்.

அநுராதபுரம் பதவிய பகுதியில் அமைந்துள்ள விகாரையொன்றுக்கு சென்ற தரம் ஐந்து மாணவர்கள் 40 பேர் உட்பட 78 பேரும் குளவிக் கொட்டு தாக்குதலுக்கிலக்காகி பதவிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் குணமடைந்த மாணவர்கள் பரீட்சைக்காகச் சென்றுள்ளனர்.