யாழில் தாய் – மகள் இணைந்து செய்த காரியம்! சுற்றிவளைத்த பொலிஸார்

யாழில் தாயும் மகளும் இணைந்து திருட முற்பட்ட போது வசமாக சிக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் யாழ். பேருந்து நிலையத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

இருவரும் மோட்டார் சைக்கிளொன்றில் காணப்பட்ட பையிலிருந்து பொருட்களை திருட முற்பட்டுள்ளனர்.

இதன்போது அருகிலிருந்தவர்கள் இதனை கவனித்து, உடனே தாய் மற்றும் மகளின் முயற்சியை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதன்பின் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அங்கு வந்த பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளதாக தெரியவருகிறது.