13ஆவது சீர்­தி­ருத்­தத்தை இல்­லா­தொ­ழித்து மாவட்ட நிர்­வா­க­சபை முறை­மைக்கு முயற்சி!! -திட்ட யோசனை இந்­தி­யா­வி­டமும் கைய­ளிப்பு

இலங்கை அர­சி­ய­ல­மைப்பில் காணப்­ப­டு­கின்ற 13 ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்தை இல்­லா­தொ­ழித்து மாவட்ட நிர்­வாக சபை முறை­மை­யு­ட­னான கட்­ட­மைப்பை உரு­வாக்­கு­வது தொடர்பில் தேசிய அர­சாங்கம் அவ­தானம் செலுத்­தி­யுள்­ளது.

இதற்கு அமை­வான திட்ட யோச­னையை வெளி­வி­வ­கார இரா­ஜாங்க அமைச்சர் வசந்த சேனா­நா­யக்க பாரா­ளு­மன்­றத்தில் அனைத்து அரசியல் கட்­சி­களின் தலை­வர்­க­ளுக்கும் கைய­ளித்­துள்ளார்.

மேலும் ஜனா­தி­பதி மற்றும் பிர­த­ம­ருக்கும் இத்­திட்ட யோசனை கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது.1987 ஆம் ஆண்டு தேசிய இனப்­பி­ரச்­சி­னையை மையப்­ப­டுத்தி இந்­தியா 13 ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்தின் ஊடாக மாகா­ண­சபை முறை­மையை இலங்­கைக்கு அறி­முகம் செய்­தது.

அப்­போ­தைய ஆட்சி அதி­கா­ரத்­தி­லி­ருந்த ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­வரும் ஜனா­தி­ப­தி­யு­மான ஜே.ஆர்.ஜய­வர்­தன மற்றும் அப்­போ­தைய இந்­தியப் பிர­தமர் ராஜீவ்­காந்தி ஆகியோர் இந்த ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­திட்­டனர்.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் உறுப்­பி­னரும் வெளி­வி­வ­கார இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான வசந்த சேனா­நா­யக்க 13 ஆவது அரசியலமைப்பினை முழு­மை­யாக மறு­சீ­ர­மைக்கும் வகையில் மாவட்ட நிர்­வாக சபை முறை­மையை முன்­வைத்­துள்­ள­துடன் அந்த திட்­டத்­தினை இந்தி­யா­வி­டமும் கைய­ளித்­துள்ளார்.

இலங்­கைக்­கான இந்­திய உயர்ஸ்­தா­னிகர் தரன்ஜித் சிங் சந்­து­விடம் கைய­ளித்­துள்­ள­தாக இரா­ஜாங்க அமைச்சர் தெரி­வித்தார்.

ஐக்­கிய தேசியக் கட்சி ஆட்சி காலத்தில் கொண்டு வரப்­பட்ட மாகா­ண­சபை முறை­மையை இரத்து செய்து புதிய திட்­ட­மொன்­றி­னூ­டாக தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வை எட்­டு­வ­தற்கு இந்­தி­யா­விடம் ஆலோ­சனை கேட்கும் வகையில் அர­சாங்கம் செயற்­பட்­டுள்­ளது.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் கடந்த வியாழக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு பாராளுமன்ற குழு அறையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் பிரஸ்தாபித்து இந்தியாவிடம் 13 ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிப்பது குறித்து ஆலோசனை கேட்டுள்ளது.