பெண்கள் ஆடையில் இரவு நேரத்தில் அலைந்த இளைஞனுக்கு ஏற்பட்ட பரிதாபம்

இளம்பெண்ணை போன்று உடையணிந்து முகமூடியுடன் மேல் மாடியில் ஏறிய இளைஞன் கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார்.

24 வயதுடைய இளைஞனே நேற்றிரவு 11 மணியளவில் அடுக்குமாடி வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.

படுகாயமடைந்த இளைஞன் ரிதிகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், குருணாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சிகிச்சை பெறும் குறித்த இளைஞன் அணிந்திருந்த பெண்ணின் ஆடையை கழற்றிய பொலிஸார் சாரத்தினை அணிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் அதிகாரி ஏ.பி டி எம் பி பண்டாரநாயக்க குறிப்பிடுகையில்,

குறித்த இளைஞன் கேப்பிட்டிகல பிரதேசத்திற்கு வந்து அவர் அணிந்திருந்த ஆடைகளை கழற்றி விட்டு பெண்கள் அணியும் ஆடையை அணிந்துள்ளார்.

அதன்பின்னர் அப்பிரதேசத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி வீடொன்றின் மேல் மாடிக்குள் நுழைந்துள்ளார்.

இளைஞன் வீட்டில் ஒரு அறையைப் எட்டிப் பார்க்கும்போது வீட்டிலுள்ளவர்களின் சத்தம் கேட்டதும் குழப்பமடைந்த இளைஞன் மேல் மாடியிலிருந்து கீழே விழுந்துள்ளார்.

குறித்த இளைஞன் சீமெந்தினால் செய்யப்பட்ட பூச்சாடியின் மேலே விழுந்து படுகாயமடைந்துள்ளார் என பொலிஸ் அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.