யாழில் சேலையால் ஏற்பட்ட குழப்பம்! பெண் சட்டத்தரணியை கைதுசெய்ய முயன்றதால் பதற்றம்

இளம்பெண் சட்டத்தரணியொருவர் யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்ய முயற்சிக்கப்பட்டதில் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

புத்தரின் உருவப்படம் பொறித்த சேலை அணிந்திருந்தமையால் அவர் கைது செய்ய முயற்சிக்கப்பட்டுள்ளார்.

யாழ் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குகளில் முன்னிலையாகுவதற்காக இளம்பெண் சட்டத்தரணியொருவர் நேற்று காலை நீதிமன்ற வளாகத்திற்கு வந்திருந்தார்.

அவரது சேலையில் புத்தரின் உருவப்படம் பொறிக்கப்பட்டிருந்தது.

அதனை அவதானித்த நீதிமன்ற பொலிஸார், யாழ் பொலிஸ் தலைமையகத்திற்கு அறிவித்தனர்.

அதனையடுத்து யாழ் பொலிஸ் நிலையத்தில் இருந்து வந்த பொலிஸ் அணியொன்று அந்த இளம்பெண் சட்டத்தரணி நீதிமன்றை விட்டு வெளியேறிய போது கைது செய்ய முயற்சித்தது.

இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

அதனை அடுத்து சம்பவ இடத்தில் ஏனைய சட்டத்தரணிகளும் கூடி கைது செய்ய முயற்சித்தமைக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

அதனையடுத்து பொலிஸார் குறித்த சட்டத்தரணியை பொலிஸ் நிலையம் வந்து வாக்கு மூலம் தருமாறு கோரி அழைத்து சென்றனர்