யாழில் ஆலயத் திருவிழாவுக்கு சென்ற 13 பேருக்கு ஏற்பட்ட நிலை..!!

வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் தேர் திருவிழாவில் பதின்மூன்று பேரின் தங்கநகைகள் அறுக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை பொலிஸாரிடம் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை துன்னாலை வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் தேர் திருவிழா நடைபெற்றது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பதின்மூன்று பேரின் தங்கநகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அவர்களிடம் அடையாளத்தை உறுதிப்படுத்தும் எந்தவித ஆவணங்களும் காணப்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.