இலங்கையர்களை கண் கலங்க வைத்த மாணவி! அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்திய தருணம்

உயிரிழந்த தந்தையின் சடலத்தை வணக்கி விட்டு, ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சை எழுதச் சென்ற மாணவி சித்தி அடைந்துள்ளார்.

அம்பாறையில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி தந்தை உயிரிழந்த நிலையில், மாணவி ஒருவர் பரீட்சைக்கு தோற்றியிருந்தார்.

அம்பாறை, மரியகந்த பிரதேசத்தில் சேர்ந்த 10 வயதான விஹங்கி ஆகர்ஷா என்ற மாணவியே பரீட்சையில் சித்தியடைந்து வியப்பை ஏற்படுத்தியுள்ளார்.

புலமைபரிசில் பரீட்சைக்கு முதல் நாள் மாணவியின் தந்தை மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தார்.

தந்தையை இழந்த சோகம் தாக்க முடியாமல் பரீட்சைக்கு செல்ல மறுத்த மாணவி, வீட்டியில் இருந்தார். எனினும் மாணவி கல்வி கற்கும் பாடசாலையின் அதிபர் மாணவியின் வீட்டிற்கு சென்று, அவருக்கு ஆறுதல் கூறி பரீட்சையில் தோற்ற வைத்தார்.

அதற்கமைய நேற்று வெளியான ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளுககு அமைய குறித்த மாணவி, சித்தியடைந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

மாணவி சித்தி அடைந்தமை பாடசாலைக்கு மட்டுமன்றி, அந்தப் பகுதி மக்களுக்கு பெருமை சேர்ந்த விடயமாக மாறியுள்ளதாக மக்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.