வவுனியா மாவட்ட செயலகத்திற்குச் சென்ற ஊடகவியலாளர்களை தடுத்து நிறுத்திய பொலிசார்.

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு இன்று காலை சென்ற ஊடகவியலாளர்களை பிரதான வாயிலில் கடமையிலுள்ள பொலிசார் உட் செல்ல அனுமதிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று காலை வவுனியா அரசாங்க அதிபரை ஜயப்பன் சாமிகள் குழுவினர் சென்று மனுக்கொடுத்து சந்திப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அச் செய்திகளைச் சேகரிப்பதற்குச் அவர்களுடன் சென்ற ஊடகவியலாளர்களை மாவட்ட செலயகத்தின் வாயிலில் கடமையிலிருந்த பொலிசார் தடுத்து நிறுத்தியதுடன் உட் செல்ல அனுமதிக்கவில்லை.

இதையடுத்து நீண்ட நேரத்தின் பின்பே ஊடகவியலாளர்களை உட் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அரச அதிபரின் செய்திகளை சேகரித்து பொதுமக்களுக்கு வழங்குவதற்குச் செல்லும் ஊடகங்களின் ஊடகவியலாளர்களை தடுத்து நிறுத்தி மக்களுக்குச் செல்லும் செய்திகளை தடுப்பதற்கு பொலிசார் முயலக்கூடாது அவர்களின் கடமைகளுடன் நின்று தமக்கான பணிகளைச் செய்வதற்கு மாவட்ட செயலகம் உரிய நடவடிக்கைகளை பொலிசாருக்கு மேற்கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகின்றது.