போராட்டக்களத்திற்கு ஒன்றாக வந்த மைத்திரி – மஹிந்த

மைத்திரி – மஹிந்த அரசாங்கத்தின் பலத்தை காட்டும் வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டக்களத்திற்கு மைத்திரியும் மஹிந்தவும் வருகைத் தந்துள்ளனர்.

குறித்த போராட்டம் நாடாளுமன்றத்தை அடுத்துள்ள பொல்துவ பகுதியில் தற்போது நடைபெறுகின்றது.

இதன்போது மைத்திரியும், மஹிந்தவும் ஒன்றாக வருகைத் தந்ததுடன், மேடையில் இருவரும் ஒன்றாக நின்று மக்களுக்கு கை காட்டியுள்ளனர்.

மேலும், கடும் மழைக்கு மத்தியில் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்திற்கு ஆதரவாளர்களும், அரசியல்வாதிகளும் வருகைத்தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.