தேசியக் கீதத்தின் போது மைத்திரியின் சைகையை தடுத்த மகிந்த!

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டக் கூட்டத்தின் முடிவில் தேசியக்கீதம் இசைக்கப்பட்ட வேளையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆதரவாளர்களுக்கு கையசைத்து தமது சந்தோசத்தை வெளிப்படுத்தினார்.

இதன்போது அவரின் கையை பிரதமர் மகிந்த ராஜபக்ச தட்டிவிட்டு அவருக்கு தேசியக்கீதம் இசைக்கப்பட்டமையை நினைவூட்டியுள்ளார்.

இந்த காட்சி சமூகவலைத்தளங்களில் வெளியாகியாகி வைரலாக பரவி வருகின்றது.

அத்துடன் மஹிந்த ராஜபக்ச உரையாற்றும்போது ஒருக்கட்டத்தில் மைத்திரியை மாட்டிவிட்ட சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

தாம் ஜனாதிபதியாக இருந்தபோது, சுதாகரித்துக் கொண்டு எந்த விடயத்தையும் செயலாளரான மைத்திரியை கொண்டே கூறவைத்ததாகவும் கூறியுள்ளார்.

இதேவேளை, அதுபோன்று இன்றும் மைத்திரியே எல்லாவற்றையும் கூறுவார் என்றும் தெரிவித்த மகிந்த உரையை முடித்த பின்னரே மைத்திரி உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.