நாடாளுமன்றில் வெடித்த போராட்டம்! ஜனாதிபதி விடுத்துள்ள அவசர செய்தி

எந்த சூழ்நிலையிலும் நான் நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கமாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் தளத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ‘சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசியலமைப்பிற்கும் பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கும் மதிப்பளித்து செயற்பட வேண்டும் என கேட்டுக்கொள்வதுடன், பாராளுமன்றத்தின் தற்போதைய அமர்வினை எந்தவொரு காரணத்திற்காகவும் முடிவுறுத்த நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்” என ஜனாதிபதி பதிவிட்டுள்ளார்.

நாடாளுமன்றில் ஏற்பட்ட பெரும் அசம்பாவிதத்தை அடுத்தே ஜனாதிபதி இதை பதிவிட்டுள்ளார்.