மைத்திரி – மகிந்தவிற்கு ரணில் விடுத்துள்ள எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்கள் முடிவுக்கு கொண்டு வரப்படாமை குறித்து முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், ஒக்டோபர் 26ஆம் திகதிக்கு முன்னர் இருந்ததைப் போன்று நாடு வழமைக்க கொண்டு வரப்பட வேண்டும் எனவும் அவர் வலிறுத்தியுள்ளார்.

வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின் போது, நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற அசம்பாவிதங்கள் குறித்தும் கருத்து வெளியிட்டிருந்தார்.

“நாடாளுமன்றில் இன்று ஏற்பட்டிருந்த அசம்பாவிதங்கள் போன்று, இதற்கு முன்னர் ஒருபோதும் நடந்ததில்லை” என அவர் மேலும் கூறியுள்ளார்.