படுகொலை செய்யப்பட்ட நிலையில் தாயும் தந்தையும் சடலங்களாக மீட்பு…மன வளர்ச்சி குன்றிய மகன் கைது….!!

தென்மாகாணம் காலி மாவட்டத்திலுள்ள அக்மீமன பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் பின்புறத் தோட்டத்திலிருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

குறித்த சடலங்கள் நேற்றிரவுமீட்கப்பட்டதாகவும் அவை இரண்டும் கணவன் மனைவியினுடையவை என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பிரியந்தி மங்களிக்கா எனும் 55 வயதினையுடைய பெண்ணும் சந்த்திரபால எனும் 60 வயதினையுடைய ஆணுமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.இதுதொடர்பில் குறித்த இருவரினதும் 31 வயதான மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட மகன் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.