யாழில் கோர விபத்து! வர்த்தகருக்கு நேர்ந்த துயரம்

காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் கந்தர்மடம் இந்து மகளிர் வீதியில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் கடக்க முற்பட்ட காரை மோதியதில் காரில் பயணித்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இன்று (20) நண்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கந்தர் மடம் இந்து மகளிர் வீதியில் காரில் பயணித்த குறித்த வர்த்தகர், பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடக்க முற்பட்டுள்ளார்.

அப்போது எதிரே வந்த புகையிரதம் காரை மோதி கந்தர் மடம் அரசடி வீதிவரை இழுத்துச்சென்றுள்ளது.

இந்த சம்பவத்தில் கார் முற்றுமுழுதாக சேதமடைந்ததுடன் காரில் பயணித்த யாழ் வர்த்தகரான பாலா என்பவர் தலையில் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.