ஆவணமெதிலும் கைச்சாத்திடவில்லை – சம்பந்தன்

ஐக்கியதேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஆவணமெதிலும் கைச்சாத்திடவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஐக்கியதேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் இலங்கை தமிழரசுக்கட்சி- தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவராகிய நானும் இணைந்து கைசாத்திட்டதாக தெரிவிக்கும் ஆவணமொன்று வெளியாகியுள்ளது.

ஐக்கியதேசிய கட்சி தலைவருடன் இணைந்து நான் அவ்வாறான ஆவணம் எதிலும் கைச்சாத்திடவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்

அவ்வாறான ஆவணம் போலியானது என்பதையும் நான் தெரிவிக்க விரும்புகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.