விடைபெற்றார் மஹிந்த! முடிவுக்கு வந்த பதவி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பிரதமராக நியமிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சற்று முன்னர் தனது பதவியிலிருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை ராஜினாமா இராஜினாமா செய்வதாக கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

விஜயராமமாவத்தையிலுள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றிருந்த மஹிந்த ராஜபக்ச, நீண்ட நேரம் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து பிரதமர் பதவியை மஹிந்த இராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் இன்றைய தினம் ராஜினாமா கடிதத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது.