யாழில் சுமந்திரனின் பதாகைக்கு சேதம் விளைவிப்பு

யாழ்ப்பாணம் – வடமராட்சி பருத்தித்துறையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனுடைய ஒளிப்படங்கள் பொறிக்கப்பட்ட பதாகை மீது வர்ணம் (பெயின்ட்) பூசப்பட்டு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இருப்பினும் குறித்த பதாகையில் உள்ள ஜனாதிபதி மற்றும் பிரதமருடைய ஒளிப்படங்கள் மீது எந்தவிதமான வர்ணங்களும் பூசப்படவில்லை.

பருத்தித்துறை பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு கடந்த புதன்கிழமை வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது.

அன்றைய தினத்தில் பருத்தித்துறை நீதிமன்ற வீதி மற்றும் ஆலய புணரமைப்பு செய்யப்பட்மை தொடர்பான “கம்பெரலிய அபிவிருத்தி திட்டம்” எனும் திட்டத்தின் பதாகை திரைநீக்கம் செய்யப்பட்டது.

இதில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுடைய ஒளிப்படங்களும் பொறிக்கப்பட்டிருந்தன.

குறித்த புகைப்படங்களில் உள்ள சுமந்திரனின் ஒளிப்படங்கள் மீதே இவ்வாறு வர்ணம் பூசப்பட்டுள்ளது.