மூவரைக் கைது செய்த பொலிஸார் – வவுனியாவில் நடந்தது என்ன?

வவுனியாவில் நேற்றையதினம் இரவு பல்வேறு சம்பவங்களுடன் தொடர்புடைய மூன்று பேர் கைது செய்யபட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலைய போதை தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

அதனடிப்படையில் வெளிநாட்டு சிகரெட்களை உடைமையில் வைத்திருந்தார் என்ற குற்றசாட்டில் ஒருவரும், குடு, கஞ்சா போதை பொருட்களை மில்லிகிராம் அளவில் வைத்திருந்தனர் என்ற குற்றசாட்டில் இருவருமாக மூன்று பேர் கைது செய்யபட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் இன்று நீதிமன்றில் ஆயர்படுத்தபடவுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருவதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.