யாழில் குடும்பஸ்தர் ஒருவருக்கு நேர்ந்த சோகம்…. அதிர்ச்சியில் குடும்பத்தார்

யாழ்ப்பாணம் அல்லாரை வடக்கில் மயங்கி வீழ்ந்த குடும்பஸ்தர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

நெஞ்சு வலிப்பதாகக் கூறி மயங்கி வீழந்த நபரை வாகனத்தில் ஏற்றி சாவகச்சேரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர் ஏற்கனவே அவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்தனர்.விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சாவகச்சேரி நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்தனர்.

அறிக்கையினைப் பார்வையிட்ட நீதிவான் பிரதேச திடீர் இறப்பு விசாரணை அதிகாரி மூலம் விசாரணைகளை நடாத்தி நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார்.

இறப்பு விசாரணைகளை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி மூலம் மேற்கொண்டு, மருத்துவமனை சட்ட மருத்துவ அதிகாரி மூலம் உடற் கூற்றுப் பரிசோதனை நடாத்தி அறிக்கை தாக்கல் செய்யமாறும் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சடலத்தை உறவினரிடம் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டார்.