மகன் இறந்த சோகத்தை தாங்க முடியாத தாய் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டார்.
இந்தச் சம்பவம் முல்லைத்தீவு சிராட்டிகுளம் பகுதியில் நடந்துள்ளது.
கடந்த முறை க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தோற்றிய மாணவனான யோகராசா துசியந்தன் தொடர்ச்சியாக நோய் வாய்ப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் யாழ்ப்பாண வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழத்துள்ளார்.
உயிரிழந்த மாணவனின் சடலம் நேற்று அதிகாலை 2 மணிக்கு சிராட்டிகுளம் பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
மகனது பிரிவைத் தாங்க முடியாத தாயார் நேற்று அதிகாலை 5 மணியளவில் வீட்டிலிருந்து சுமார் 800 மீற்றர் தொலைவில் உள்ள வனப்பகுதிக்குச் சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
ஏற்கனவே ஒரு பிள்ளையைப் பறிகொடுத்த தாய் தனது இரண்டாவது பிள்ளையையும் பறிகொடுத்துள்ளார்.
இந்த துக்கத்தை தாங்க முடியாத யோகராசா சரஸ்வதி என்ற தாயாரே உயிரிழந்துள்ளார்.