இலங்கையில் இப்படியொரு கொடூரம்! பாடசாலை மாணவிக்கு அதிபர் செய்த கொடுமை

அங்குணுகொலபெலெஸ்ஸ பிரதேசத்தில் 13 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு தொடர்பில் பாடசாலை ஒன்றில் பிரதி அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சூரியவெவ பிரதேசத்தை சேர்ந்த 8ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார். கைது செய்யப்பட்ட அதிபர் அங்குணுகொலபெலெஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

அநாமதேய தொலைபேசி அழைப்பிற்கமைய செயற்பட்ட அங்குணுகொலபெலெஸ்ஸ பொலிஸார் மாணவியிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதற்கமைய தான் பல முறை பிரதி அதிபரினால் துஷ்பிரயோகத்திற்குள்ளாகியுள்ளதாக மாணவி தெரிவித்துள்ளார்.

மாணவியின் தந்தைக்கும் பிரதி அதிபரிரும் இடையில் உள்ள நட்பிற்கமைய கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்னர் குறித்த பாடசாலைக்கு மாணவி இணைத்துகொள்ளப்பட்டுள்ளார்.

பின்னர் அங்குணுகொலபெலெஸ்ஸ பிரதேசத்தில் பிரதி அதிபருக்கு சொந்தமான கட்டடம் ஒன்றின் மேல் மாடியில் மாணவி தங்குவதற்கான வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளார். அங்கு வைத்தே பிரதி அதிபர் தன்னை துஷ்பிரயோகம் செய்ததாக மாணவி குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பிரதி அதிபர் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.