இலங்கையில் 3 மணித்தியாலங்களில் 2646 பேர் அதிரடியாக கைது செய்ய பொலிஸார்

இலங்கை பூராகவும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் பல்வேறு குற்றங்கள் தொடர்பில் 2646 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் கீழ் நேற்று முற்பகல் 6 மணி தொடக்கம் இரவு 9 மணி வரை இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன் போது , ஹெரோயின் உள்ளிட்ட விஷ போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபானம் தொடர்பில் 1790 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 623 பேரும் மற்றும் வேறு குற்றங்கள் தொடர்பில் 101 பேரும் இதன் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சுற்றிவளைப்பிற்காக 13 ஆயிரத்து 186 காவற்துறை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.