இலங்கையில் ஒரே நாளில் பட்டிதொட்டியெங்கும் பிரபலமான தமிழ் அமைச்சர்! வைரலாகும் புகைப்படம்

யாழ்.குடாநாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் மனோகணேசன் சுன்னாகம் சந்தையில் மரக்கறி விற்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.பொது நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் மனோகணேசன் யாழ்.குடாநாட்டுக்கு வருகைதந்துள்ளார். இதன்போது சுன்னாகம் மரக்கறி சந்தைக்கும் விஐயம் செய்திருந்தார்.சுன்னாகம் பொதுச்சந்தையின் அப்பிவிருத்தி தொடர்பாக ஆராய, வலிதெற்கு பிரதேசசபை தலைவர் உள்ளிட்ட பிரமுகர்களுடன் அங்கு சென்றிருந்தார்.

சந்தையின் அப்விருத்திக்காக 300 மில்லியன் ரூபா பெற்றுத்தருவதாக குறிப்பிட்ட அமைச்சர், பின்னர் திடீரென மரக்கறி வியாபாரத்தில் இறங்கினார்.

இதன்போது மரக்கறி விற்பனை செய்து கொண்டிரு ந்த வியாபாரி ஒருவரை எழுப்பிவிட்டு தான் அந்த இடத்தில் அமர்ந்து கொண்ட அமைச்சர் தனது நண்பர் பாஸ்கராவை நோக்கி, கொழும்பை விட யாழ்ப்பாணத்தில் பாகற்காய் மலிவு என கூறி விற்பனை செய்துள்ளார்.

பாஸ்கராவும் மரக்கறி கொள்வனவு செய்தார்.இந்தக் காட்சியை சந்தையில் கூடியிருந்தவர்கள் இரசித்து பார்த்துக் கொண்டு நின்றார்கள்.
இது தொடர்பான புகைப்படங்கள் தற்பேது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.மேலும், இந்த புகைப்படத்தை தனது முகநூலிலும் பதிவிட்டுள்ளார் அமைச்சர் மனோ.