பேருந்துகள் நேருக்குநேராக மோதல்; 60 பேர் பரிதாப பலி!

இன்று இரு பேருந்துகள் நேருக்குநேராக மோதிய விபத்தில் 60 பேர் உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான கானாவின் தென்பகுதியில் இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளது.

கானா நாட்டின் தெற்கு பகுதியில் சமீபத்தில் கிழக்கு போனோ என்னும் தனி மாகாணம் உருவாக்கப்பட்டது.

இந்த மாகாணத்தின் வழியாக சென்ற இரு பேருந்துகள் நேருக்குநேராக மோதிய விபத்தில் 60 பேர் உயிரிழந்ததாக கிழக்கு போனோ பொலிஸ் உயரதிகாரி ஜோசப் அன்ட்வி கியாவு தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஈராக்கில் குர்தீஸ் புத்தாண்டு விழாவுக்காக சென்றவர்களின் சொகுசு படகு ஆற்றில் மூழ்கிய விபத்தில் பலி எண்ணிக்கை 100 ஆக உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.