விபத்தில் உயிரிழந்த நபரது வீட்டுக்குள் வாள்களுடன் நுழைந்த கும்பல் வீட்டாரை வாளால் வெட்டி அச்சுறுத்தி நகை , மற்றும் பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் அளவெட்டிப் பகுதியில் நடந்துள்ளது.
அல்லைப்பிட்டியில் நேற்று நடந்த விபத்தில் உயிரிழந்த இளைஞனின் இறுதிக் கிரியைகள் இன்று நடைபெறவுள்ளது.
இறந்தவரின் சடலம் வீட்டுக்கு வந்து சேர்வதற்கு முன்னர் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.