அதிகாலையில் அதிர்ச்சி: யாழ் வந்த பேருந்து தடம்புரண்டது!

கிளிநொச்சியில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி தடம்புரண்டு விபத்திற்குள்ளானதில் மூவர் காயமடைந்தனர்.

இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றது. பதுளையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்த பேருந்து, வீதியை விட்டு விலகி, மதகு ஒன்றில் மோதி கவிழ்ந்தது.

அதிவேகம் அல்லது சாரதியின் தூக்க கலக்கம் காரணமாக விபத்து நேர்ந்திருக்கலாமென கருதப்படுகிறது.

காயமடைந்தவர்கள் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.