மட்டக்களப்பில் தேவாலயமொன்றிலும் சற்று முன் வெடிப்பு சம்பவம்

மட்டக்களப்பு நகரில் புனித மைக்கல் கல்லூரிக்கு அருகிலுள்ள சியோன் தேவாலயமொன்றில் சற்றுமுன்னர் வெடிப்பு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

சுமார் ஐந்து பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர். அத்துடன் தேவாலயம் இந்த சம்பவத்தினால் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

இந்த நிலையில் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை கொழும்பிலும் இன்று காலை வெடிப்பு சம்பவமொன்று பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.