பயங்கரவாத தாக்குதல் அபாயத்தை முன்கூட்டியே எச்சரித்த தேசிய புலனாய்வு சேவை!

நாட்டில் இவ்வாறான பயங்கரவாத தாக்குதல் இடம்பெறலாமென்பதை தேசிய புலனாய்வு சேவை கடந்த 11ம் திகதியே எச்சரித்திருந்த தகவல் இப்பொழுது வெளியாகியுள்ளது.

இதேவேளை, குண்டு வெடித்த இடங்களிற்கு பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ நேரில் சென்று, நிலைமைகளை ஆராய்ந்து வருகிறார்.

பாதுகாப்புசபை கூட்டத்தை கூட்டுமாறு ஜனாதிபதி அவசர உத்தரவு பிறப்பித்துள்ளார்.