இயேசு சிலையில் படிந்த ரத்தக்கறை: இலங்கையின் கோர சம்பவத்தை உணர்த்திய ஒற்றை புகைப்படம்

இலங்கையில் 8 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் இதுவரை 207 பேர் இறந்துள்ளனர், 405 பேர் படுகாயமடைந்துள்ளனர் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் கொச்சிக்கடை புனித அந்தோணியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவப்பிட்டி தேவாலயம், மட்டக்களப்பு சியோன் தேவாலயம், சங்கிரில்லா நட்சத்திர ஹொட்டலின் மூன்றாவது மாடி, சின்னமன் கிரான்ட் , கிங்ஸ்பெரி நட்சத்திர ஹொட்டல் தெஹிவளை மற்றும் தெமட்டைகொடை ஆகிய 8 இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.

சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இயேசு சிலை மீது ரத்தம் படிந்திருக்கும் புகைப்படம் தற்போது இலங்கையில் வைரலாகியுள்ளது,

இலங்கையை சேர்ந்த நபர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் அந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

தேவாலயத்தில் குண்டுவெடிப்பு நடந்தபோது அதில் காயமடைந்தவர்கள் மற்றும் இறந்துபோனவர்களின் ரத்தம் அங்கிருந்த இயேசு நாதரின் சிலுவையில் தெறித்துள்ளது.

பிதாவே, இவர்களை மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள் என்ற வார்த்தைகள் இயேசு நாதரை சிலுவையில் அறைந்தபோது அவர் சொன்ன வார்த்தைகள்…. தற்போது இந்த புகைப்படத்திற்கும் அந்த வரிகள் வார்த்தைகள் பொருந்துவதாக உள்ளது என நெட்சன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.