குண்டு வெடிப்பால் புனித அந்தோனியாரின் உருவச்சிலைக்கு பாதிப்பா? அங்கு நடந்தது என்ன

கொழும்பு – கொச்சிகடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் தமிழ் மொழி மூலமான பூஜைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது நேற்றைய தினம் குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்றைய தினம் காலை 8.00 மணியளவில் உயிர்த்தெழுந்த ஞாயிறை அனுஸ்டிக்கும் வகையில் கொச்சிகடை தேவாலயத்தில் தமிழ் மொழி மூலமான ஆராதனைகள் ஆரம்பமாகியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அருட் தந்தையினால் ஆராதனைகள் நடத்தப்பட்டு வந்ததாகவும், விசுவாச பிரமாண ஜெபத்தை சொல்லும் போது குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளதாகவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் இந்த குண்டு வெடிப்பின் போது புனித அந்தோனியாரின் உருவச்சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, சம்பவத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் இன்றும், நாளையும் தேவாலயங்களில் விசேட மணி ஒலிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.