இலங்கை குண்டுவெடிப்பில் மட்டகளப்பு சிறுமிக்கு என்ன நேர்ந்தது? சோகத்தில் குடும்பத்தார்

இலங்கையில் நேற்று இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில், 290 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் பலர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் மட்டகளப்பு குண்டு வெடிப்பில் மட்டக்களப்பு ஜெயந்திபுரத்தை சேர்ந்த ஜெஷானிகா திவேனிதன் எனும் இலங்கை சிறுமியை காணவில்லை.இப்போது வரை எந்தவித தகவலும் கிடைக்காததால் குடும்பத்தார் சோகத்தில் உள்ளனர்.

இச்சிறுமியை பற்றிய தகவல் கிடைத்தால் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் அறிவிக்கும்படி கேட்டுகொண்டுள்ளனர்.