மாலபேயில் கைப்பற்றப்பட்டுள்ள சந்தேகத்திற்கிடமான வாகனம்

கொழும்பிற்கு அருகில் உள்ள மாலபே நகரில், மிஹிந்து மாவத்தை பகுதியில் வாகனங்களை சோதனையிட்ட போது சந்தேகத்திற்கிடமான வாகனம் ஒன்றை தாம் கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துருகிரிய பொலிஸார் நேற்று மாலை மேற்கொண்ட சோதனையின் போது இந்த வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன் கொழும்பு நகரில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புகளுக்கான வெடிப்பொருட்கள் மற்றும் சந்தேகநபர்களை அழைத்து வந்ததாக சந்தேகிக்கப்படும் வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சாரதியை வெள்ளவத்தை பொலிஸார் நேற்று கைது செய்தனர்.

வெள்ளவத்தை இராமகிருஷ்ண வீதியில் சென்று கொண்டிருந்த போது இந்த வாகனத்தை கைப்பற்றியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.