விடுதலைப் புலிகளின் காலத்தில் கூட இப்படி நடந்ததில்லை – மஹிந்த

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தக் காலத்தில் கூட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இலங்கையின் எந்தவொரு அரசாங்கத்தாலும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில் இந்த அரசாங்கம் எந்தவொரு முறையும் இல்லாமல் வெடிக்காத பிரதேசங்களிலும் ஊரடங்குச் சட்டத்தை 24 மணிநேரம் அமுல்படுத்தியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மஹிந்த மேற்கண்டவாறு தெரிவித்தார்.