எதிர்க்கட்சித் தலைவரான மஹிந்த ராஜபக்சவின் கோட்டையான ஹம்பாந்தோட்டைக்கு விசேட பாதுகாப்பு படையினர் விரைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த மாவட்டத்திலுள்ள தேவாலயங்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காகவே விசேட அதிரடிப்படையினர் அங்கு சென்றுள்ளனர்.
ஹம்பாந்தோட்டையின் முக்கிய நகரங்களிலும் முப்படையினர் இன்று பலத்த பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.
அத்துடன் ஹம்பாந்தோட்டையிலுள்ள மஹிந்த ராஜபக்சவின் இல்லத்திற்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் நேற்றைய தினம் மூன்று தேவாலயங்கள் உட்பட எட்டு இடங்களில் குண்டு வெடிப்புகள் ஏற்பட்டதை தொடர்ந்து நாட்டில் நிலவிவரும் அசாதாரண நிலைமையை கருத்தில் கொண்டு இந்த பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.