சற்றுமுன் யாழில் இடம்பெற்ற அனர்த்தம்! தீயணைப்பு படையினர் விரைவு

யாழ். தனியார் பேருந்து நிலையத்தின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த கொட்டகைகள் தீ மூட்டப்பட்டு எரிக்கப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ். மாநகர சபையின் தீயணைப்பு படையினரின் முயற்சியால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இனந்தெரியாத நபர்களினால் குறித்த கொட்டகைகள் தீ மூட்டப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.