பொலிஸ் ஊரடங்கு சட்டம் நீக்கம்

நாடு முழுவதும் நேற்று இரவு 08 மணி முதல் அதிகாலை 04 மணி வரை அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களை அடுத்து கடந்த இரண்டு தினங்களாக நாட்டில் அசாதாரண சூழல் காணப்பட்டு வருகின்றது.

இந்தநிலையில் நேற்று இரவு பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.