யாழ்.குடா நாட்டில் பலப்படுத்தப்பட்டுள்ள இராணுவ பாதுகாப்பு

நாட்டில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலால் கடந்த சில தினங்களாக அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து நாடு முழுவதும் முப்படையினர் மற்றும் பொலிஸாரினால் சுற்றிவளைப்புகள், சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் யாழ்ப்பாணம், நாவற்குழி, கைதடி பாலம் மற்றும் நாவற்குழி புகையிரத நிலையத்தில் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, சந்தேகத்துக்கிடமான முறையில் பயணம் செய்யும் வாகனங்கள் மீதும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.