வெட்டுக்காயங்களுடன்- முஸ்லிம் இளைஞனின் சடலம்!!

வவுனியா – சாளம்பைக்குளத்தில் இளம் குடும்பஸ்தரொருவர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலம் இன்று பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் சாளம்பைக்குளத்தை சேர்ந்த இம்திகா அஹலம் (வயது 32) என தெரியவருகிறது.

குறித்த நபரின் உடலில் பல பகுதிகளில் வெட்டுக்காயங்கள் காணப்படுவதாக தெரியவரும் நிலையில் சடலம் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், ஸ்தலத்தில் விசேட அதிரடிப்படையினரும் இருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.